இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

காணாமற்போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Staff Writer 05-09-2018 | 6:11 PM
Colombo (News 1st) காணாமற்போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஜனாதிபதியிடம் அறிக்கையைக் கையளித்தார். கடந்த ஆறு மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையே ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்டது.