by Bella Dalima 04-09-2018 | 6:05 PM
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் - கொல்கத்தாவில் உள்ள மேஜர்ஹட் மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 24 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மேஜர்ஹட் மேம்பாலம் இன்று மாலை திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது, பாலத்தின் அடியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் இடிபாடுகளில் சிக்குண்டுள்ளன.
வாகனங்களில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.