Colombo (News 1st) ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் நாளை (05) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுங்கட்சி விளக்கம் கோரியமையால் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து பாராளுமன்ற அமர்வு நாளை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு, மிக குறுகிய நேரத்தில் அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை வரை விவாதத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆளுங்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட மூன்று சட்டமூலங்கள் மற்றும் பிரேரணைகளில் இரண்டு நீக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.
இதற்கு மாற்றீடாக மேலும் மூன்று புதிய பிரேரணைகளை சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக்கொள்ள ஆளுங்கட்சி முயற்சித்த சந்தர்ப்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கை நாளை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.