ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்

by Staff Writer 03-09-2018 | 4:36 PM

பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டர்ன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. சதொச நிறுவனத்திற்கு சொந்தமான அரச நிதியை கடந்த அரசாங்கத்தின் அமைச்சராகவிருந்த போது, முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டர்ன் பெர்னாண்டோ,லக் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலீன் பெர்ணேன்டோ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிரத்தியே செயலாளர் மொஹமட் ஷாகிர் ஆகியோரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசூரிய இன்று உத்தரவிட்டார். கடந்த அரசாங்க காலத்தில், லக் சதொச மூலம் 50 இலட்சத்திற்கு அதிக பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்து, பணம் செலுத்தாமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.