கடவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

88 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

by Staff Writer 01-09-2018 | 8:00 AM
Colombo (News 1st) கடவத்தையில், 88 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேகநபரிடமிருந்து 740 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் நேற்றிரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 2,33,920 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.