மஹபொல சீட்டிழுப்பு மற்றும் கண்காட்சி மீண்டும்

மஹபொல சீட்டிழுப்பு மற்றும் கண்காட்சியை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானம்

by Staff Writer 01-09-2018 | 7:09 AM
Colombo (News 1st) மஹபொல சீட்டிழுப்பு மற்றும் கண்காட்சியை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் நேற்று (31) மாலை கூடியபோது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார். மஹபொல நிதியத்திற்கு பாரிய நிதியைத் திரட்டிக்கொடுத்த மஹபொல சீட்டிழுப்பு மற்றும் கண்காட்சி ஆகியன அண்மையில் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.