நகர கழிவுப்பொருட்கள் மூலம் இயற்கை உரம்

நகர கழிவுப்பொருட்கள் மூலம் இயற்கை உரம் தயாரிப்பது தொடர்பில் ஆய்வு

by Bella Dalima 01-09-2018 | 4:18 PM
Colombo (News 1st)  நகர கழிவுப்பொருட்கள் மூலம் பெறப்படும் இயற்கை உரம் தொடர்பிலான தரம் குறித்து ஆராய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகர கழிவுப்பொருட்கள் மூலம் பெறப்படும் இயற்கை உரம் தொடர்பிலான தரம் குறித்து விரைவாக விஞ்ஞான ரீதியில் ஆய்வுகளை மேற்கொண்டு, அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, தேசிய உர செயலகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சேதனப் பசளையைப் பயன்படுத்துவதில் விவசாயிகளை ஈடுபடுத்துவதுடன், அவர்கள் பயன்படுத்தும் உரத்தின் கற்மியத்தில் உள்ள உலோகங்களின் அளவு கூடுதலாக காணப்படுமாயின், அதன் மூலம் பொதுமக்கள் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.