கொள்வனவு செய்யும் நெல்லின் அளவு அதிகரிப்பு

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவை அதிகரிக்கத் தீர்மானம்

by Bella Dalima 31-08-2018 | 4:37 PM
Colombo (News 1st)  நெல் விநியோக சபையினால் விவசாயி ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லின் அளவை 3000 கிலோவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதுவரை காலம் விவசாயி ஒருவரிடமிருந்து 2000 கிலோகிராம் நெல் மாத்திரமே கொள்வனவு செய்யப்பட்டது. எதிர்காலத்தில் விவசாயிகளிடமிருந்தான நெல் கொள்வனவின் அளவை மேலும் அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். அனைத்து சந்தர்ப்பங்களிலும் விவசாயிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அம்பலாங்கொடை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.