படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் பிடித்த நடிகை

பயத்தால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் பிடித்த நடிகை

by Bella Dalima 31-08-2018 | 6:57 PM
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தில் நடித்து வரும் புதுமுக நடிகை அனுபமா பிரகாஷ், படப்பிடிப்பு தளத்தில் இருந்து பாதியிலேயே ஓட்டம் பிடித்திருக்கிறார். கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’. ஏ.கேசவன் இயக்கி வரும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகளை கொடைக்கானல் மலை உச்சியில் படம்பிடித்தனர். மிக உயரமான இடத்தில் நிற்க வைத்து பாடலை படம் பிடித்ததால் பயந்து போன நடிகை அனுபமா பிரகாஷ், மாலை படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது அறை வரை சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவர், யாரிடமும் சொல்லாமல் மதுரையில் இருந்து விமானம் மூலம் தனது சொந்த ஊர் டெல்லிக்கு சென்று விட்டார். இது தெரியாமல் படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்த குழுவினர்கள், அவரை கொடைக்கானல் முழுவதும் தேடினர். பின்பு தான் தெரிந்தது அவர் டெல்லி சென்றது. உடனே தயாரிப்பாளர் டெல்லிக்கு சென்று சமாதானம் செய்து மீண்டும் படப்பிடிப்பிற்கு அழைத்து வந்துள்ளார். இப்படம் செப்டம்பர் 7 ஆம் திகதி வெளியாகவுள்ளது.