கரம் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி

கரம் உலக சாம்பியன் பட்டத்தை வெற்றிகொண்ட இலங்கை அணி நாடு திரும்பியது

by Staff Writer 31-08-2018 | 9:13 PM
Colombo (News 1st)  கரம் உலக சாம்பியன் பட்டத்தை வெற்றிகொண்ட இலங்கை அணி இன்று (31) நாடு திரும்பியது. கரம் உலக சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் நடைபெற்றது. ஆடவருக்கான அணிப் பிரிவில் இலங்கை சாம்பியனானது. சமில் குரே தலைமையிலான இலங்கை அணியில் நிஷாந்த பெர்னாண்டோ, மொஹமட் ஷஷீட் மற்றும் உதேஷ் ஷஷிக ஆகியோர் இடம்பெற்றனர். மகளிருக்கான அணிப் பிரிவு போட்டிகளில் இலங்கை அணி இரண்டாமிடத்தைப் பெற்றது. யஷிகா ராஹூபத்த வழிநடத்திய மகளிர் அணியில் ஜோசஃப் ரொஷீடா, சலனி லியனகே, மதுஷா ராமநாயக்க ஆகியோர் அங்கம் வகித்தனர்.