வாழைச்சேனையில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வாழைச்சேனையில் இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by Staff Writer 29-08-2018 | 7:17 PM
Colombo (News 1st)  மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஜெயந்தியாய குளத்தில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது இவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஏறாவூர் பகுதியைச் ​சேர்ந்த 23 மற்றும் 24 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.