by Staff Writer 29-08-2018 | 7:17 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஜெயந்தியாய குளத்தில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது இவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.