மஹபொல நிதியை அரச வங்கிகளில் முதலீடு செய்ய அனுமதி

மஹபொல நிதியை அரச வங்கிகள், பிணையங்களில் முதலீடு செய்ய அமைச்சரவை அனுமதி

by Staff Writer 29-08-2018 | 5:24 PM
Colombo (News 1st) மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நிதியத்திலுள்ள அனைத்து நிதியையும் அரச வங்கிகள் மற்றும் பிணையங்களில் முதலீடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ முன்வைத்த பிரரேணைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மஹபொல நிதியத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமையால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. மஹபொல நிதியத்தின் முழு உரிமையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சில நிறுவனங்களின் செயற்பாடுகளினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.