மக்களுக்கு வீடுகளே தேவை நிர்மாணிக்கும் நாடுகளில்லை

மக்களுக்கு வீடுகளே முக்கியம் நிர்மாணிக்கும் நாடுகள் இல்லை: டி.எம்.சுவாமிநாதன்

by Bella Dalima 29-08-2018 | 7:53 PM
Colombo (News 1st)  மக்களுக்கு வீடுகளே முக்கியம், அவற்றை நிர்மாணித்துக் கொடுக்கும் நாடுகள் எவை என்பது முக்கியமில்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்து வருகை தரும் இலங்கை அகதிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முல்லைத்தீவில் ஊடகவியலாளர்களுக்கு இதனைத் தெரிவித்தார். இந்தியாவில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்பும் போது, அவர்களைக் குடியமர்த்த காணிகள் இல்லாமற்போகும் எனவும் காணிகளைப் பெற்றுக்கொடுக்க அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் தான் நிதி ஒதுக்குவார்கள் எனவும் அமைச்சர் மேலும் கூறினார். 160,000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அவற்றை யார் கட்டிக்கொடுத்தாலும் மக்களுக்கும் தமக்கும் பிரச்சினை இல்லை என தெரிவித்தார்.