பிலிப்பைன்ஸில் குண்டு வெடித்ததில் இருவர் பலி

பிலிப்பைன்ஸில் குண்டு வெடித்ததில் இருவர் பலி, 37 பேர் காயம்

by Chandrasekaram Chandravadani 29-08-2018 | 9:22 AM
பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் நடைபெற்ற திருவிழா ஒன்றில், மோட்டார்சைக்கிளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டொன்று வெடித்ததில் இருவர் பலியாகியுள்ளதோடு, 37 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுல்தான் குடாரட் மாகாணத்தில் நெடுஞ்சாலை ஒன்றிலுள்ள ஆடை விற்பனை நிலையத்திற்கு முன்பாக இந்தக் குண்டு வெடித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் சம்பவம் குறித்து எவரும் பொறுப்பேற்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.