பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவியுயர்வு

பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவியுயர்வு

by Staff Writer 29-08-2018 | 9:27 AM
Colombo (News 1st) பிரிகேடியர்கள் ஐவர் மேஜர் ஜெனரல்களாகவும் லெப்டினன் கேர்னல் பதவி வகித்த 25 பேர் கேர்னல்களாகவும் ஜனாதிபதியினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ள பிரிகேடியர்களுள், யுத்தத்தால் அங்கவீனமுற்ற 4 பிரிகேடியர்களும் அடங்குகின்றனர். ஶ்ரீலங்கா கஜபா ரெஜிமன்ட்டின் டி.ஜீ.ஐ.பி. கமகே, சிங்க ரெஜிமன்ட்டின் ரஜீவ விக்ரமசிங்க, ஶ்ரீலங்கா காலாற்படையின் ஜே.ஆர். அம்பேமொஹாட்டி மற்றும் கெமுனு ரெஜிமன்ட்டின் டபிள்யூ.எச்.எம். மணதுங்க ஆகியோருக்கே இவ்வாறு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் வி.ஏ.டி.என். தெமடன்பிட்டியவும் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.