கிளிநொச்சியில் யுவதியின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் யுவதியின் சடலம் மீட்பு

by Staff Writer 29-08-2018 | 9:16 PM
Colombo (News 1st)  கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியில் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பன்னங்கண்டி பகுதியிலுள்ள வயலின் கால்வாய் பகுதியில் இன்று முற்பகல் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 22 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் யார் என இதுவரை அடையாளங்காணப்படவில்லை. சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அணியும் இடுப்புப் பட்டியொன்றும், காற்சங்கிலியொன்றும் சிவப்பு மற்றும் நீல நிற பேனாக்கள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.