ஜனாதிபதி நாளை நேபாளத்திற்கு விஜயம்

ஜனாதிபதி நாளை நேபாளத்திற்கு விஜயம்

by Staff Writer 28-08-2018 | 6:26 AM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (29) நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். வங்காளவிரிகுடாவை அண்டிய நாடுகளின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் 4ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். நேபாள தலைநகர் காத்மண்டுவில் இந்த மாநாடு, 'வங்காளவிரிகுடாவை சமாதானமான பேண்தகு வலயமாக உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. நேபாள விஜயத்தின்போது ஜனாதிபதி, நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டார் (Bidhya Devi Bhandar) மற்றும் பிரதமர் கே.பி. ஒலி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன், இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி லும்பினி நகருக்கும் விஜயம் செய்யவுள்ளார்.