by Staff Writer 28-08-2018 | 1:16 PM
JUST IN - கண்டி - கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து, வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் சுமார் 500 மீற்றர் வரையான வளாகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வைத்தியசாலையின் கட்டடத்திற்கும் வாகனங்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வைத்தியசாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.