மியன்மார் இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை

மியன்மார் இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் - ஐ.நா.

by Chandrasekaram Chandravadani 27-08-2018 | 5:07 PM
மியன்மாரின் ராக்கின் பிராந்தியத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் அந்நாட்டு இராணுவத் தலைமைகள் விசாரணையைச் சந்திக்க வேண்டுமென ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கானோரிடம் மேற்கொள்ளப்பட்ட சாட்சிப்பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையூடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் வௌியிட்டிருந்தனர். ஆனால், கிளர்ச்சியாளர்களை மீதே தாக்குதல் நடத்தியதாகவும் பொதுமக்கள் மீதல்ல எனவும் மியன்மார் இராணுவம் மறுத்துவருகின்ற நிலையில், தற்போது இந்தச் செய்தி வௌியாகியுள்ளது.