ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை

அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை

by Staff Writer 27-08-2018 | 4:50 PM
Colombo (News 1st) அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (27) மீண்டும் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். சந்தேகநபருக்கு பிணையாளிகளாகக் காணப்படும் ஜாலிய விக்ரமசூரியவின் மனைவி, மற்றும் சகோதரி ஆகியோரையும் கைது செய்யுமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார். நீதிமன்றத்தை புறக்கணித்து செயற்படும் ஜாலிய விக்ரமசூரியவின் மனைவி மற்றும் அவருடைய சகோதரி ஆகியோரும் நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக கருதுவதாக அறிவித்து அவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கோரிக்கை விடுத்தது. எனினும், பிணையாளிகளுக்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பிடியாணை அவர்களுக்கு கிடைத்துள்ளதா, இல்லையா என்பது தொடர்பில் அறியாது இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்த நீதவான் அதனை நிராகரித்துள்ளார்.