மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி

by Staff Writer 26-08-2018 | 9:08 PM

கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை ஜும்மா சந்தியில் இன்று பிற்பகல் 6.30 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 30 வயதான பெண் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்