by Staff Writer 25-08-2018 | 12:41 PM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் நுழைவாயில் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடவத்த, அத்துருகிரிய, பின்னதூவ மற்றும் கொடகம நுழைவாயில் பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிவேக வீதி நிர்வாகம் மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.
சுமார் 70,000 வாகனங்கள் நாளாந்தம் தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கின்றன.
எனினும் இன்றைய தினம், 110,000 வாகனங்கள் தெற்கு அதிவேக வீதிக்கு பிரவேசித்துள்ளதாக எஸ். ஓப்பநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அப்பகுதியூடான போக்குவரத்தில் கவனம் செலுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.