தமிழக மீனவர்கள் 27 பேருக்கு  2 வருட சிறைத்தண்டனை

தமிழக மீனவர்கள் 27 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை

by Staff Writer 24-08-2018 | 3:42 PM
Colombo (News 1st)  தமிழக மீனவர்கள் 27 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மீனவர்களில் 07 பேர் தங்கூசி வலைகளை பயன்படுத்தியமையால் அவர்களுக்கு தலா 2000 ரூபா அபராதமும் நீதவானால் விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த 10 ஆம் திகதி அதிகாலை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 27 மீனவர்களுக்கே இன்று ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.​