சுற்றுலா சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கண்டிக்கு சுற்றுலா சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by Staff Writer 24-08-2018 | 4:06 PM
Colombo (News 1st)  கண்டி - வத்தேகம பகுதியில் உள்ள ரஹஸ் எல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். களுத்துறை பகுதியை சேர்ந்த 35 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (23) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற போதே இவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கியவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைக்காக சடலம் கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.