இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற மெத்தியூ அபேசிங்க

18ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற மெத்தியூ அபேசிங்க

by Staff Writer 23-08-2018 | 2:26 PM
இந்தோனேஷியாவில் நடைபெறுகின்ற 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் 100 மீற்றர் ப்றீஸ்டைல் நீச்சல் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இலங்கை வீரர் மெத்தியூ அபேசிங்க தகுதிபெற்றுள்ளார். இதனூடாக இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இறுதிப் போட்டிக்கு தெரிவான முதலாவது இலங்கை வீரராக மெத்தியூ அபேசிங்க பதிவானார். 'ஆசியாவின் பலம்' என்ற தொனிப்பொருளில் இம்முறை இடம்பெறும் 18 ஆவது ஆசிய விளையாட்டு விழா, இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் 5ஆவது நாளாக இன்றும் நடைபெறுகின்றது. 200 மீற்றர் ப்றீஸ்டைல் நீச்சல் போட்டியிலும் பங்கேற்ற கைல் அபேசிங்கவிற்கு இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 50 மீற்றர் பட்டர்ஃபிளை ஸ்டைல் நீச்சல் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர்களான அகலங்க பீரிஸ் மற்றும் ச்செரந்த டி சில்வா ஆகியோரால் இறுதிப் போட்டிக்கு தகைமை பெறமுடியாமற்போனது.