by Staff Writer 23-08-2018 | 1:02 PM
Colombo (News 1st) ரயில்வே ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (23) கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகே குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடல் ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிதி அமைச்சின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளதாகவும் ஜீ.எஸ். விதானகே மேலும் தெரிவித்தார்.
சம்பளப் பிரச்சினையை முன்வைத்து கடந்த வாரம் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.