வடக்கில் வறட்சியால் சுமார் 320,000 பேர் பாதிப்பு

வடக்கில் வறட்சியால் சுமார் 320,000 பேர் பாதிப்பு

by Staff Writer 22-08-2018 | 7:36 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் வறட்சி காரணமாக 91,639 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, பளை பகுதியில் குளத்து நீர் வற்றியதால் நீர்வாழ் உயிரினங்கள் அல்லலுறுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி மற்றும் கண்டாவளை பகுதிகளிலேயே அதிக வறட்சி நிலவுவதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். கால்நடைகளும் பறவைகளும் நீரின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளன. வட மாகாணத்தில் வறட்சியால் சுமார் 319,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 24,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.