வலி. வடக்கில் 4 ஏக்கர் காணி விடுவிப்பு

வலி. வடக்கில் இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு

by Staff Writer 21-08-2018 | 8:45 PM
Colombo (News 1st)  வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த சுமார் நான்கு ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன. 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்த காணிகள் இராணுவத்தினர் வசமிருந்தன. 24 குடும்பங்களுக்கு சொந்தமான இந்த காணிகள் இன்று விடுவிக்கப்பட்டதாக நியூஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியிலிருந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறிடங்களில் வாழ்ந்து வந்த நிலையில், இன்று சொந்த இடங்களுக்கு திரும்பினர். யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் காணிகள் விடுவிக்கப்பட்டமைக்கான ஆவணம் கையளிக்கப்பட்டது.