by Staff Writer 21-08-2018 | 6:32 AM
Colombo (News 1st) மாத்தளை மாவட்டத்தில், இந்த வருட சிறுபோகத்தில் 4,000 ஹெக்டெயர் காணியில் பெரிய வெங்காயத்தை உற்பத்தி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில் தம்புள்ளை, சீகிரியா, கலேவெல, நாவுல ஆகிய பகுதிகளில் அதிகளவு பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
இதன்மூலம், 70,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை அறுவடை செய்யமுடியும் என மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த பகுதிகளின் கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்குத் தரமான பெரிய வெங்காய விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.