தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் உபதலைவர் கைது

தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் உபதலைவர் கைது

by Staff Writer 21-08-2018 | 1:32 PM
Colombo (News 1st) தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் உப தலைவர் லட்சுமணன் பாரதிதாசன் கைது செய்யப்பட்டுள்ளார். பெருந்தோட்ட நிறுவனமொன்றிற்கு சொந்தமான காணிக்குள் பலவந்தமாக நுழைந்து நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணிக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்ததில் 20,000 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கடந்த 9 ஆம் திகதி தோட்ட முகாமைத்துவத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இன்று (21) காலை நகர சபையின் உப தலைவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுடன், பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கைதான சந்தேகநபர், இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.