ரெஜினா கொலை:2 சாட்சியங்களை முற்படுத்துமாறு உத்தரவு

சுழிபுரம் சிறுமி கொலை வழக்கின் இரண்டு சாட்சியங்களை மன்றில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவு

by Staff Writer 21-08-2018 | 4:16 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் சிறுமி ரெஜினா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் இரண்டு சாட்சியங்களை மன்றில் முற்படுத்துமாறு மல்லாகம் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். மல்லாகம் நீதவான் நீதீமன்றத்தில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் இரண்டாம் சாட்சியமான 10 வயது சிறுமியையும், 7 வயது சிறுவனையும் மன்றில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் விசாரணை அதிகாரிகளையும் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.