குற்றச்செயல்களுடன் தொடர்புடைய எண்மர் STFஆல் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய எண்மர் விசேட அதிரடிப் படையினரால் கைது

by Staff Writer 21-08-2018 | 9:45 AM
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8 பேர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் போதைப் பொருள் போன்றன கைப்பற்றப்பட்டதாக அதிரடிப்படை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (21) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், கண்டி நகருக்கு பெருமளவிலான போதைப்பொருளை விநியோகிக்கும் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகந்த, கதிர்காமம், மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.