இன்று திறந்துவைக்கப்படவுள்ள விசேட நீதிமன்றம்

இலஞ்ச ஊழல் குறித்த நடவடிக்கையை எடுப்பதற்கான விசேட நீதிமன்றம் திறந்துவைப்பு

by Staff Writer 21-08-2018 | 7:11 AM
Colombo (News 1st) அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் இலஞ்ச ஊழல் முறைகேடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஸ்தாபிக்கப்பட்ட விசேட மேல்நீதிமன்றம் இன்று (21) திறந்துவைக்கப்படவுள்ளது. இந்த நீதிமன்றம், நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால் திறந்துவைக்கப்படவுள்ளது. கொழும்பு போக்குவரத்து நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கட்டடத்தில் இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. விசேட மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தில், மேல்நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன ஆகியோரும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோரும் அடங்குகின்றனர்.