இத்தாலி வௌ்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

இத்தாலி வௌ்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 21-08-2018 | 7:48 AM
இத்தாலியின் தென் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இத்தாலியின் கலாப்ரியா (Calabria) பிராந்தியத்திலுள்ள தேசிய பூங்கா ஒன்றில் நடந்துசென்று கொண்டிருந்த 4 ஆண்கள் மற்றும் 4 பெண்களும் வௌ்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அதேநேரம், வௌ்ளத்திலிருந்து 10 வயதான சிறுவன் உட்பட 18 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் 6 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனிடையே, கடந்த வாரம் இத்தாலியின் ஜெனோவோ நகரின் நெடுஞ்சாலையிலுள்ள பாலம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.