வௌிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்த முதலமைச்சர் சி.வி.

சி.வி. வட மாகாணம் குறித்து வௌிநாட்டுப் பிரதிநிதிகளை தௌிவுபடுத்தினார்

by Staff Writer 20-08-2018 | 7:04 PM

வட மகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (20) சந்திப்பொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றது. 17 நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். வட மாகாணத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அரசியல் நிலமைகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.