ஆனமடுவ ஹோட்டலின் உடைமைகளை சேதப்படுத்திய மூவர் கைது

ஆனமடுவ ஹோட்டலின் உடைமைகளை சேதப்படுத்திய மூவர் கைது

by Staff Writer 20-08-2018 | 9:06 AM
Colombo (News 1st) ஆனமடுவ - ஆண்டிகம பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஆனமடுவ - ஆண்டிகம பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்குள் நேற்று முன்தினம் (18) நுழைந்த சிலர் அங்கிருந்த உடமைகளை சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.