காணாமல்போன மீனவர்கள் கண்டுபிடிப்பு!

அம்பலாங்கொட கடற்பகுதியில் காணாமல்போன மீனவர்கள் கண்டுபிடிப்பு

by Staff Writer 20-08-2018 | 12:49 PM
Colombo (News 1st) அம்பலாங்கொட கடற்பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமற்போன 11 மீனவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காலியிலிருந்து கடலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்களால், காணாமற்போன மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் பத்மசிறி திசேரா தெரிவித்துள்ளார். குறித்த மீனவர்களை தற்போது கரைக்கு அழைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதிகளவான மீன்களைக் கொண்டுவந்தமையே மீனவர்களின் படகு விபத்திற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த மீனவர்களின் படகு ஹிக்கடுவ பகுதிக்கு அருகில் கடல் சீற்றத்தினால் விபத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.