யாழில் ஹெல்மெட்டால் தாக்கி ஒருவர் கொலை

யாழ். காரைநகரில் ஹெல்மெட்டால் தாக்கி ஒருவர் கொலை

by Staff Writer 19-08-2018 | 9:57 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் ஹெல்மெட்டினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடையாளந் தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (18) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளா​ர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததையடுத்து, அவர் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறிய ரக லொறியொன்றில் வந்த மூவர், குறித்த நபரை கைகள், கால்கள் மற்றும் ஹெல்மட்டினாலும் தாக்கியுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காரைநகர் பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.