சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து ஆராய்வதற்கு குழு

சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து ஆராய்வதற்கு பிரதேச மட்டத்தில் குழுக்கள் ஸ்தாபனம்

by Staff Writer 19-08-2018 | 1:16 PM
Colombo (News 1st) சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு பிரதேச மட்டத்தில் 330 குழுக்களை ஸ்தாபிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது. சகல மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் இந்த குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரியொருவர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். இதன்முதன் கட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.