இது வேலைசெய்பவர்கள் உள்ள அரசாங்கம் - பிரதமர்

இது வேலைசெய்பவர்கள் உள்ள அரசாங்கம் - பிரதமர்

by Staff Writer 19-08-2018 | 8:47 PM

''இது வேலைசெய்பவர்கள் உள்ள அரசாங்கம். தம்பட்டம் அடித்து ஆடி முடித்து வீட்டிற்குச் செல்பவர்கள் உள்ள அரசாங்கமல்ல. அதிகமாக பேச வேண்டியதில்லை'' என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

10 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், கேகாலை மாவட்ட பயனாளிகளுக்கு இன்று உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது 1,364 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். (VIDEO)