by Bella Dalima 18-08-2018 | 5:37 PM
கேரளாவில் தொடரும் வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது.
இடம்பெயர்ந்த சுமார் 250,000 பேர் 1500-இற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வௌ்ள அனர்த்தத்தை கேரளா எதிர்கொண்டுள்ளது.
நிவாரணம் வழங்குதல் மற்றும் மீட்புப் பணிகளில் 125 மீட்புக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
அத்துடன், 4 விமானங்கள் மற்றும் 3 கரையோர பாதுகாப்பு கப்பல்கள் மீட்புப் பணிகளில் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளன.
கேரளாவின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் வௌ்ளத்தில் சிக்குண்டுள்ள நிலையில், அவர்களை வான் மார்க்கமாக மாத்திரமே மீட்க முடியும் என்பதால் மேலதிக ஹெலிகொப்டர்களை பாதுகாப்பு அமைச்சிடம் கேரள முதல்வர் கோரியுள்ளார்.