பெலவத்தயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு

பெலவத்தயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு

by Bella Dalima 17-08-2018 | 3:34 PM
Colombo (News 1st)  மாதம்பே - குளியாப்பிட்டிய வீதியின் பெலவத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவத்தில் 31 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பாதசாரியான 73 வயதான பெண்ணும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.