நல்லாட்சி எனும் சொல் சீர்குலைந்துள்ளது

நல்லாட்சி எனும் சொல் சீர்குலைந்துள்ளது: கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க

by Bella Dalima 17-08-2018 | 8:43 PM
Colombo (News 1st)  நல்லாட்சி எனும் சொல் தற்போது சீர்குலைந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்தார். அரச சேவையில் அதிகளவில் முறைகேடுகள் இடம்பெறும் நாடுகளில் முதன்மையாகவுள்ள இலங்கையின் முறைகேடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் நிறுவனமே கணக்காய்வாளர் திணைக்களம் என காமினி விஜேசிங்க சுட்டிக்காட்டினார். நல்லாட்சி அரச துறைகளில் இருக்க வேண்டிய முக்கியமான விடயம் அரச ஊழியர்களின் நேர்மை எனவும் அதனை கட்டியெழுப்புவதற்கான திட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கும் பாரிய பொறுப்புக்கள் தம்வசம் உள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.