சந்தேகநபர்கள் மீது வழக்கு தொடராமைக்கான காரணம்

சந்தேகநபர்கள் மீது வழக்கு தொடராமைக்கான காரணம்

by Staff Writer 16-08-2018 | 12:10 PM
Colombo (News 1st) கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது வழக்கு தொடராமைக்கான காரணம் குறித்து ஆராயவுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அறிவியல்சார் அறிக்கைகள் இதுவரையில் கிடைக்காமையால், சந்தேக நபர்கள் மீது வழக்கு தொடர்வதில் தாமதம் நிலவுவதாக நீதி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எச்.எம். அதிகாரி தெரிவித்துள்ளார். அதற்கமைய, அறிக்கை தாமதமாகியுள்ளமை தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் மற்றும் சிறைச் சாலைகள் திணைக்களம் ஆகியவற்றை அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக செயலாளர் கூறினார். தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவித்து, வெலிக்கடை சிறைச் சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சில பெண் கைதிகள், நேற்று முன்தினம் சிறைச்சாலை கட்டடத்தின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.