by Staff Writer 16-08-2018 | 8:20 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தை நாளை (17) நடைபெறவுள்ளது.
நாளை காலை 9.30-க்கு இராஜகிரியவில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.