கிணற்றிலிருந்து தாய், மகனின் சடலங்கள் மீட்பு

வவுனியாவில் கிணற்றிலிருந்து தாய், மகனின் சடலங்கள் மீட்பு

by Staff Writer 15-08-2018 | 3:39 PM
Colombo (News 1st)  வவுனியா - கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 32 வயதான தாயும் 4 வயதான மகனுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அயல் வீட்டு கிணற்றில் தவறி வீழ்ந்த மகனை காப்பற்ற சென்ற போது, தாயும் கிணற்றில் வீழ்ந்திருக்கக்கூடும் என பொலிஸார் கூறினர். நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலங்களை வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.