வாடிகள் தீக்கிரை: மீனவர்கள் மூவருக்கு விளக்கமறியல்

நாயாறில் வாடிகள் தீக்கிரை: மீனவர்கள் மூவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 15-08-2018 | 6:09 PM
Colombo (News 1st)  முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் மீனவர் வாடிகள் சில தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று மீனவர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நாயாறு பகுதியில் நேற்று முன்தினம் (13) இரவு 10.30 அளவில் 8 வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டன. மீன்பிடிப் படகு ஒன்றும் வலைகள் உள்ளிட்ட பொருட்களும் தீக்கிரையாகின. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இதேவேளை, நாயாறு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் நேற்று (14) காலை கைது செய்யப்பட்டனர். குறித்த மீனவர்களின் 8 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.