அநுராதபுரத்தில் சிறுவனைத் தாக்கிய கழுகு

சிறுவனைத் தாக்கிய கழுகு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

by Staff Writer 15-08-2018 | 9:10 AM
Colombo (News 1st) அநுராதபுரத்தின் சுவரிதம பிரதேசத்திற்குள் நுழைந்து சிறுவன் ஒருவனைத் தாக்கிய கழுகுகைப் பிடித்த பிரதேசவாசிகள், வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (14) காலை குறித்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கழுகு தாக்கியுள்ளது. இதனையடுத்து, குறித்த சிறுவனின் தாயாரும் அயலவர்களும் சிறுவனைக் காப்பாற்றி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்ததாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதேநேரம், கடந்த 13 ஆம் திகதி 2, 6 மற்றும் 7 வயதான பிள்ளைகளையும் குறித்த கழுகு தாக்க முயற்சித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.