தனியார் பஸ் ஊழியர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

by Staff Writer 14-08-2018 | 10:22 PM
Colombo (News 1st)  அபராதத் தொகை அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் பஸ் ஊழியர்கள் நாளை (15) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். இதேவேளை, இலங்கை தனியார் பஸ் ஊழியர் சங்கம் உள்ளிட்ட பஸ் உரிமையாளர் சங்கங்கள் இந்த பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு வழங்கவில்லை என தெரிவித்துள்ளன. உயர்தரப் பரீட்சை நடைபெற்று வருகின்றமையால், பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளாது சேவையில் ஈடுபடுமாறு பஸ் ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக குறித்த சங்கங்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.