மாத்தறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

மாத்தறையில் சடலம் மீட்பு!

by Staff Writer 13-08-2018 | 3:44 PM

Colombo (News 1st)மாத்தறை ஊறுபொக்க பகுதியிலுள்ள கருவாத்தோட்டத்தின் பாழடைந்த மலசலகூடத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி காணாமல் போன 25 வயதுடைய ஒருவரின் சடலமாக இது இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். காணாமல் போனவரின் வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கருவாத்தோட்டத்திலுள்ள பாழடைந்த மலசலகூடம் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் காணாமல் போனவருடையதா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கானாமல் போன நபர் உளநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.